எருமைய் தாய்மடியும் எங்கள் சொந்த’மடி’ கிளியே!

கன்னித் தமிழ் தவழும்- எம்
கன்னங்குடாவில்…

கெட்டியான
கட்டித் தயிரை
கொட்டித் தரும் இந்த..
எருமைத்தாயின் மடியும் – எந்தன்…

சொந்தமடிகிளியே!✊

“மீனகங்களை”யும்
“தேனகங்களை”யும் கொண்டு
இலங்கும் எம் மட்டு மண்ணின்…பெரும்…

சொத்தடிகிளியே!!✊

கன்னங்கரிய காரிருள்தனிலே…
பகைப்புலம் தேடிய பொழுதுகளில்
எருமைத் தாயோடு மோதி வீழ்ந்த
பசுமை நினைவுகள்
நெஞ்சினிலே தமிழ் நெஞ்சினிலே

கொட்டுதடிகிளியே!!!✊

 

– அறத்தலைவன் –