அருட் தந்தை ஜேம்ஷ் பத்திநாதர் அவர்கள்.

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும்
எங்கள் எல்லைகளை
எப்பவோ கடந்திருந்தது.

“மானுட நேயம் மேலோங்கட்டும்”(“Let humanity prevail”) எனக் கொட்டை எழுத்தில் வாசகம் தாங்கியவர்களும் மாலை நேர விருந்தாளிகள் ஆயினர்.

ஆம், இந்த வாசகத்துக்குச் சொந்தக்காரர்களான ICRC யும் தமிழர்தம் அவலங்கள் எல்லை கடந்த 2009ஆம் ஆண்டில் வன்னியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

பின்னர் திருமலையில் இருந்து நண்பகல் நேரம் கப்பலில் வருகை தரும் அவர்களில் ஒரு சிலரும் மாலை 4.00 மணியளவில் வெளியேறிவிடுவார்கள்.

அந்தச் சேவையும் அல்லது மேற்கு வகுத்த மானுட நேயக் கொள்கையும் இறுதியில் இல்லை என ஆனது.

     ஆனாலும்,.....

அதியுன்னத மானுட நேயப்பணி செய்தனர் சிலர் அல்லது மருத்துவப் பணி செய்த எமக்கு தோள் கொடுத்தனர்.

அந்தச் சிலரில் முதன்மையானவர் அருட் தந்தை ஜேம்ஷ் பத்திநாதர் அவர்கள்.

ஆம்,
‘அறம்’ செய்தவர்! ~ தமிழர்
‘மறம்’ போற்றியவர்!
‘திறம்’ கொண்டவர்!

இனியும் தமிழர்தம்
“அகம்”களில் வாழ்வார்!🙏