‘புயல்’ ஓய்ந்த எம் தொல்லூர்களில்,
‘குயில்’ இனிக் குரலெடுத்துப் பாடட்டும்!
‘மயில்’ வந்து மகிழ்ந்து ஆடட்டும்!
‘இயல், இசை, நாடகம்’ அரங்கேறட்டும்!
இயல்பு வாழ்க்கையே வயவையில் இனி இயல்பென ஆகட்டும்! 🙏
(நீண்ட நெடுங்காலத்தின் பின் அண்மையில் அரசால் விடுக்கப்பட்ட வயாவிளான் கிராமத்தில் மீளக்கட்டி எழுப்பப்பட்ட உத்தரிய மாதா தேவாலயம்)