மறவோம்! மறவோம்! மாவீரரை மறவோம்!

பஞ்சினில் நெருப்பேந்தி
பஞ்ச காலத்து பஞ்சு விளக்கை
பற்ற வைத்து பக்கமிருந்து நாம்
படித்துக் கொண்டிருந்தோம்!

பணத்துடன் பொன் பொருளும் பெரும்
பதவிகளும் தேடி நாம் தேசங்கள் பல
பயணப் பட்டுக் கொண்டிருந்தோம்!

பாவமதை கரைத்திட பரபரப்பாய்-யாம்
பல கோவில் வாசல்கள் ஏறினோம்!

பரலோகம் கிடைத்திட வேண்டியே
பரம்பொளின் அருள் வேண்டினோம்.

நெஞ்சினில் நெருப்பேந்தி
நெடுமலையும் நீள்கடலும் கடந்து
நீங்களோ எமக்காய் போராடி மடிந்தீர்கள்!