போருலா நாயகன் – மலரவன்

இளவேனில் சாரல் இதமாய்
இதயத்தில் வீசிய பருவத்தின்
இன்பங்களை எல்லாம் – எம்
இனத்தின் இருப்பிற்காய் துறந்தவன்!

இனவாத ஆக்கிரமிப்புப் படைகளின்
இரும்புக் கோட்டைகளின்
இடுக்குகள் எங்கும் “பசீலன் 2000” எடுத்து
இடி முழங்கிய பெருவேங்கை இவன்!

இருபது வயதினிலே இனிமையாய்
இலக்கிய வித்தகர்கள் போற்றிடும் – போர்
இலக்கியமும் படைத்த இலக்கியன்
இக் காணரும் வீரன்!🎖