சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் – நிழலரசின் நிஜமுகங்கள்

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

குண்டுவீச்சாலும் பட்டினியாலும்
வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள்.

நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த உதவி மருத்துவர்களும் தாதியர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

புதிய புதிய சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்தவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் எங்களால் உயிர்காக்கப்பட்டவர் ஆன்மாவின் ஆழத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தார்கள்.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள்.

இருதரப்பிலும் சிறை வைக்கப்பட்டிருந்த
கைதிகளை பெற்றோர் பார்வையிடவும்,களத்திடை எதிரியின் கைகளில் அகப்பட்ட வித்துடல்களை வாங்கித் தரவும் மீதமாய் மருத்துவ உதவிகளும் செய்த ICRC அடுத்தத கட்டமாய் அந்தரித்த எமது மக்களை
கைவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த
ICRC யின் இறுதிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

குண்டுவீச்சாலும் பட்டினியாலும்
வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும்” #நாங்கள்_இருக்கிறோம்”
என சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தினர் கைகொடுத்து புதுவேகம் தந்தார்கள்.

நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

இங்கே மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த #தாதியர்களும்_உதவிமருத்துவர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்த புதியவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் இங்கே இந்த ஒளிகொண்ட ஒளிப்படத்தில் இருப்பவர்களால் பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் இவர்களும் இருக்கிறார்கள்.