பாலகுரு அம்மாவுக்கு உலகத் தமிழினத்தின் அகவணக்கம்

மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்.

மார்ச் 31, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான “பிரிகேடியர் ” ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார்.

பார்வதியம்மா,

கிட்டம்மா,

ரூபநிதியம்மா,

வரிசையில் இன்னுமோர் ஆளுமை மிக்க அன்னையை தமிழர் நாம் இழந்திருக்கிறோம்.

தமிழினத்தின் மூத்த தளபதி ஒருவரின் தாய் என்பதற்கும் அப்பால் சிங்களப் பேரினவாதத்தின் வன்கொடுமையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழரெம் வவுனியா மாவட்டத்தின் “பாவற்குளம்” எனும் ஊரில் நிமிர்ந்த ஓர் பெண் ஆளுமை இவர் ஆவார்.

“பாவற்குளம்” பிரதேசம் குடியேற்றவாதம் எனும் போர்வையில் வன்பறிப்பு செய்யப்பட்ட கொடிய காலகட்டத்தில் தனிநபர்களாக அதை எதிர்த்தவர்களில் இந்த அன்னையும் ஒருவர் ஆவார்.

தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரனைப் பெற்ற வீரத்தாயை,

‘அகம்’தனில் ஆழ நினைந்து
‘கரம்’ தனைக் கூப்பி
‘சிரம்’ தனை தாழ்த்தி

நிமிர்வோம் ஒன்றுபட்ட தமிழராய்!🙏