புலத்து வாழ்விலும் இனித்திடும் எங்கள் “புலம்”கள்!

வரப்புலம், ஒட்டகப்புலம், திடற்புலம்
எல்லாமே எங்கள் “வரம்”!

பள்ளப்புலம், குட்டியப்புலம், வரப்புலம்
எல்லாமே “பலம்”!

மற்றவர்களுக்காய் வாழ்ந்த மறவர்கள் அவதாரம் எடுத்த எங்கள் செம்மண்!

(01)வரப்’புலம்’!
(02)திடற்’புலம்’!
(03)குட்டியப்’புலம்’!
(04)ஒட்டகப்’புலம்’!
(05)பள்ளப்’புலம்’!

அத்தனையும்
எங்கள் ‘பலம்’.

அத்தனை “புலமும்”வயவை அன்னையைக்கு அணி செய்யும்
அணிகலன்கள் ஆகும்!

நாளும் நலமும் பலமும் ‘எம் வயவை அன்னை’ பெற்றிட
தான்தோன்றிப் பிள்ளையார் கடைக்கண் பார்வை வேண்டும்!🙏