ஈர நெஞ்சங்களே வீர நெஞ்சங்களாகின

காடையர் செயல் தினம் தினம்
கட்டு மீறியது.

பக்கத்துத் தெருவெல்லாம்
பாடைகள் போனது.

அக்கம் பக்கம் எங்கும்
அல்லோலம் கேட்டது.

படித்தனர் பலர்! – சீமைக்கு
பறந்தனர் சிலர்!

பார்த்துப் பதறியவர்கள் மட்டும்
பாசறை புகுந்தனர்!

உரிமை பெற்றிடுவோம் என
உரமாகிப் போயினர்!

களத்திடை வீழ்ந்து
காவியம் ஆகினர்!