மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சி தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம். பொதுச் செயலாளர் செ. கயேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

செந்தமிழ் பேசும் எம் இனமும்
செம்பட்டியலில்
இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காய் தனைத் தந்தார்.

தன்மான உணர்வுடன்
நீள நடந்த எங்களரும் சோதரரே

‘அகம்’தனில் நினைந்து
‘கரம்’ குவித்து
‘சிரம்’ தாழ்த்துகிறேன்!🙏