இது கருவறுக்கும் நேரம்..

“01)சாதியின் பெயரால்,
02)மதத்தின் பெயரால்,
03)பிரதேசவாதத்தின் பெயரால்,
04)அரசியல் கட்சிகளின் பெயரால்

நாங்கள் சண்டையிட மாட்டோம்” என்ற நம்பிக்கைகளுடனும்
தலையாய கனவாகிய
தாயகக் கனவுடனும் துயிலும் இல்லங்களில் மாவீரர்கள் துயில் கொள்கிறார்கள்!

மாவீரர்கள் துயில் கலைக்காது நாம் ஒற்றுமையாகச் செயல்படுவது நாங்கள் அவர்களுக்குச் செய்யக்கூடிய மிகச் சிறிய கைமாறு ஆகும்!

மாவீரர்கள் துயில் கலைக்கும் செயலானது, தமிழினம் துகில் உரிவதற்கு சமனான வெட்கக் கேடானதும் அருவருப்பானதும் செயலாகும்!

இரத்த ஆறுகள் பாய்ந்த நாடுகளில் எல்லாம் நற்சிந்தனைகள் ஊற்று எடுத்ததுதான் உலக வரலாறு.

இவ்வகையில் ஏலவே பாரினில் பல்லாண்டு பல்லாண்டு பண்பட்ட
நாம் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்களா?

எமை வேரறுக்கும் சாதியம் களைவோம்!

தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் அனைத்தையும் தீயிடுவோம்! தீரமாய் எழுவீர் இளையோரே!

மேதினியில் தமிழர் நாம் மேன்மையுற மேலான சிந்தனைகள் கொள்வோம்!

வாரீர்! இளையோரே வாரீர்! வாரீர்!