3 ஆம் ஆண்டு நினைவேந்தல்

3 ஆம் ஆண்டு நினைவேந்தல்
***************************

பெருமைகொள் எம் மன்னார் மண்ணின்
பெருக்கமரம் போல்
பெருத்த பல நினைவுகள் தந்த தந்தையே,

எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றீர்கள்!

தலைமகனாம் மாவீரன் கில்மனை
தாய்மண் காக்க உவந்த தந்தையே,

எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றீர்கள்!

அருகிருக்கும் அருமருந்தாய் இன்னுமோர் மகவையும் மருத்துவர் ஜோன்சனாய் அனுப்பிய தந்தையே,

எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றீர்கள்!

தமிழ் வாழ்வுக்கு இலக்கணமாய் வாழ்ந்து வழிகாட்டிய தன்மானத் திருத்தந்தையே,

என்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டேதான் இருப்பீர்கள் ஐயா! 🙏