முள்ளிவாய்க்கால் விழியோரம்..

” நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”

– யோவான் 10:11 –

மலைப்பிரசங்கத்தை மக்களுக்குச் சொன்ன அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களும் புத்தனைக் கைதொழுதவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அருட்தந்தையின் இந்தபுகைப்படம் முள்ளிவாய்க்காலில் கடைசி நாட்களில் எடுக்கப்பட்டது.

கடவுளின் வடிவமாய் உள்ள வண பிதாவாய் இருந்தாலென்ன?

வைத்தியராய் இருந்தாலென்ன?

சிங்களவர்களுக்கு மாங்கனித்தீவில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமிழர்களாகவே தெரிகிறார்கள்.

அந்த விடையத்தில் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாகவே உள்ளார்கள்.

தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் அன்றும் இன்றும் அதிகம் அதிகம் வேற்றுமைகளைக் காண்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை!

வதைபட்ட எம்மினத்தின்
நீதிக்காய் ஒன்றாய் எழுவோம்!