எமது நிலத்தில் நாம் வாழ அனைவரும் ஒன்றாவோம்.

42

அன்புக்குரிய வயவை உறவுகளே
எமது வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 19/04/2019 சித்திரைப் பெளர்ணமி தினத்தன்று புலத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் ஒன்று கூடிப்படையலிட்டு பூசை வழிபாடுகள் இடம்பெறும்.

அன்று நாம் அனைவரும் கையொப்பம் இட்டு எழுத்துபூர்வமான கோரிக்கை மனுவொன்றை இராணுவ அதிகாரி மற்றும் அரசியல் பிரதிநிதிகள், ஆளுனர், அரசாங்க அதிபர் போன்ற அனைவருக்கும் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இது பற்றி நாம் அனைவரும் கூடி ஆராய்வற்கும் கோரிக்கை மனுவில் கையொப்பம் இடுவதற்காகவும் ஒன்றுகூடவுள்ளோம்.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பிரதேசங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எம்மக்கள் புலத்தில் வேறுபிரதேசங்களிலோ அல்லது புலம்பெயர் தேசங்களிலோ நிரந்தவாழ்விடங்களை அமைத்து விட்டார்கள் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உள்ளதாக அறியப்படுகிறது.

எனவே எங்கள் தாய் மண்ணிலேயே எங்களை வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் இக்கோரிக்கை அமையும் என்பதால் இக்கையெழுத்து மனு சமர்ப்பிக்கும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டு கவனம் செலுத்துவோம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
நன்றி
ஏற்பாட்டாளர்கள்