காதல் அல்ல இது

155

விழுந்து விடத்தான் போகிறது
உன்
விழியோரம் தங்கியிருக்கும் துளி..

எவ்வளவு முயன்றாலும்
உன்னால்
உள்ளிழுக்க இயலாது மீண்டும்..

தானாக அது விழ முன்னம்
நீயாக இறுக்கி விடு
மைதோய்ந்த இரு இமைகளை..

விழியிலிருந்து துளி துண்டாடப்படும் கணம்
பதிவு செய்து விடும்
உனக்குள் நானிருந்ததை..