மரத்தார்..! – நீங்கா நினைவுகள்.

195

அன்பைப் நிறைத்து வைத்த
பொந்துக் கண்கள்..
தேனிறைத்த முகைகளாய்
தடித்த இதழ்கள்..

நீதி மீட்டராய்
நீண்ட நெடு விரல்கள்..
ரோசா முட்களாய்
வளர்ந்த விரல் நகங்கள்..

சாய்ந்து களைப்பாற
அகன்ற முதுகு தண்டு – தலை
சாய்த்துக் கதைபேச
உருண்ட கரச் செண்டு..

நிலையாய் இருக்க
வைரமான காலிரண்டு.. (இரண்டு 1/4 = அரை)
இலையாய் துளிர்க்க
பரந்த வேர் மனசு..

வெட்டினாலும் வடியும் நீர்
ஒட்டிடுமே பிசினைப் போல்..
உண்மைதான் சொன்னார்கள்
பயன் தரு மர(த்)ந்தான் நீர்தாமே..