எந்த துளி சிறந்தது

பிறருக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளி, இரத்தத் துளி இரண்டிலும் வலிமையானது எது..?, காரணம்..??

   

கண்ணீர்த்துளி – அன்பினால், கருணையினால் இப்படி உணர்வுகளினால் உதிர்வது. கண்ணீர் அன்பின் அடையாளம் ஆனாலும் வெறும் கண்ணீர் இயலாமையைக் காட்டுவதாகும்.

இரத்தத்துளி – உணர்வுகளினால் தூண்டப்பட்ட உடல்களில் இருந்து வழிவது. பிறருக்காக இரத்தம் சிந்தும் முன் ஒரு துளிக் கண்ணீராவது சிந்தப் பட்டிருக்கும். அதே சமயம் இரத்தம் சிந்துவது இன்னொருவன் கண்ணில் இன்னொரு துளி கண்ணீரை உண்டாக்கும்..

ஒரு வகையில் இரண்டுமே பலவீனமானவைதான்.

உண்மையிலேயே வலிமையானது பிறருக்காக உதிர்க்கப்படும் வியர்வைத்துளிதான். இதுதான் கண்ணீர்த்துளி, இரத்தத்துளி இரண்டையும் நிறுத்தும் சக்தி கொண்டது