இன்று இறுதிப் போட்டி – ஐபிஎல்-2018

335

இந்தியன் பிரிமியர் லீக் திருவிழாவின் உச்சக்கட்டம் இன்று. சிறந்த மட்டையாளர்களையும் அனுபவம் வாய்ந்த வீரர்களையும், முந்நாள் இந்நாள் ஜாம்பவான்களையும் கொண்ட கிழட்டுச் சிங்க அணி எனச் செல்லமாக அழைக்கப்படும் சென்னை கிங்ஸும்,

பந்துவீச்சில் பலமான, அதிரடி ஆட்டக்காரர்களையும் கொண்ட ஐதராபாத் அணியும் வெற்றிக்கிண்ணத்துக்காக மோத உள்ளன. மும்மை ஆடுகளத்தில் நடக்க இருக்கும் இவ்வாட்டம் மிகவும் விறு விறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விறுதி ஆட்டத்தில் ஆடும் அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும். ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக பிளே அப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்த ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் ஆட உள்ளதால் கிண்ணத்தை வெல்ல வெறியோடு விளையாடுவார்கள்.

அதே போல, ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் பிளே அப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை இரு தடவை கிண்ணத்தை வென்றுள்ளது. இம்முறையும் வென்றால், மூன்று தடவை கிண்ணத்தை வென்ற மும்பையின் சாதனையைச் சமன் செய்து விடும். எனவே சென்னையும் தன் முழு வலுவையும் ஆற்றலையும் பயன்படுத்தும்.

ஆகமொத்தத்தில் இறுதிப்போட்டி கிரிக்கெட் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான போட்டியாகத்தான் இருக்கப் போகின்றது