(நான்) கவிதை எழுதும் முறை – 2

752

மக்கள் இருவகை
தன்னைச் சுற்றிப் பார்ப்பவர்கள்
தன்னுள்ளே பார்ப்பவர்கள்
சுற்றிப் பார்ப்பவர்களுக்குள்
வார்த்தைகள் உண்டு
கருத்துக்களை தேடுகிறார்கள்
உள்ளே பார்ப்பவர்களிடம்
கருத்துக்கள் உண்டு
வார்த்தைகளைத் தேடுகிறார்கள்..
ஒவ்வொருவருக்கும் தேடல்கள் வேறு..

என்னுடைய கவிதைகளில் பலவற்றைக் கண்டால்
நான் சுற்றிப் பார்ப்பவன் என்று புரியும்..

ஒரு கரு கிடைத்தால் அலசி ஆராய்ந்து
மெருகேற்றி என் எண்ணங்களை ஏற்றி
வடித்து முடித்து விடுகிறேன்..
ஏனென்றால்
என்னிடம் சொற்கள் உண்டு
அவைகளை அடுக்கி
அர்த்தம் கொடுத்தால் போதும்.

சில பல கவிதைகளை
உள்ளூர
ஊறவைத்து
களிமண்ணாய் பிடித்து
சிற்பமாக்கி இருக்கிறேன்..

இது போல இருவழிகளும்
இன்னும் பலவழிகளும் உண்டு..

ப்ரியா நீ கொடுத்த
பிரியாணி
வாழ்க்கைப் பாதையில் நாம்
சக பிரயாணி

என வர்த்தைகள் அடுக்குவது எளிதா அரிதா?

ஜின் ஜின்னா ஜாக்கடி
செவத்த பொண்ணு 
சிரிக்க ஒரு ஜோக்கடி
ஃபன் ஃபன்னா பண்ணாடி
படுக்கப் போகும் முன்னாடி
கழட்டு உனக்கெதுக்கு கண்ணாடி

இப்படியெல்லாம் வார்த்தைக் கோலம் பொட்டு பார்த்தால் தவறா? இல்லையா?
தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.. தொண்டையில் அடைத்துக் கொண்டு வார்த்தைகளில் வருவதற்கு பல எண்ணங்கள் தவிக்கும்..
அவற்றைக் கொண்டு வரவேண்டுமெனில் வார்த்தைகளை உபயோகப்படுத்திப் பழகிக் கொள்ளல் வேண்டும்..

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்