தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்.

“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

-பாவேந்தர் பாரதிதாசன்-

பாவேந்தரின் உயிர்ப்பான உயர்ந்த கவிவரிகளை பண்ணோடு பாடி மேடைகளில் ஆடலுடன் முற்றுப்புள்ளி வைத்திடாமல், உன்னத தேடலுடன் உண்மையாகவே உயிர்க் கொடை செய்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!