தென்னம் பிள்ளை ஆனாய்.

முற்றத்தில் முப்பது வகை மரங்கள்.

சுற்றத்தில் முன்னூறு வகை மரங்கள்.

கற்றதில் யாம் அறிந்து கொண்டவை மூவாயிரம் வகை மரங்கள்.

மொத்தத்தில் தாவர இராச்சியத்தில்
எண்ணற்ற மரங்கள்! – ஆனாலும்

சித்தத்தில் இனித்த மரம் என்ன தெரியுமா?
‘தென்னம்பிள்ளை’

முன்னூறு நாள் சுமந்து மூச்சடக்கி
ஈன்றேடுத்த “பிள்ளை”க்கு நிகரானாய்!

ஆம்,

ஞாலத்தில் ஞானச் செருக்கு நிறை
மூத்தகுடிக்கு- நீ

தென்னம்_”பிள்ளை” ஆனாய்!