பிரான்சு தேசத்தில் தன்னை நிலைநாட்டிய தமிழ்மகன்.

130

பிரான்சு மண்ணில் பொறியியல் துறையில் முதுமானிப் பட்டம் (Master degree) பெற்றுச் சாதித்துள்ளார் திரு நிறை செல்வன் ரொசான் இராசலிங்கம்.

பிரான்சு தேசத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றான ரென் நகரில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சிறப்பு இரட்டைப் பட்டம் பெற்ற வெகு சிலரில் முதல்தர மாணவனாக இவர் இருந்தார். அதே இடத்தில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பணி நியமனமும் பெற்றார்.

பிரான்சில் பிறந்து வளர்ந்த ஈழக்குழந்தையான இவர் தன் தாய்மொழியாம் தமிழ்மொழியை 12 ஆண்டுகள் கற்றுத் தேர்ந்துள்ளார்.

தமிழையையும் வயலின் இசையையும் முறைப்படி கற்ற இவர் இசைப்போட்டிகளில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தன் சிறப்பான இசை ஆளுமையால் பல மேடைகளை ஆண்டும் வருகிறார்.

தாய் தந்தையருக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை தேடிந்தந்த ரொசானை வயவன் இணையம் மனமுவந்து வாழ்த்துகிறது.