தரிசனம்

139

அழுது சத்தமிட்ட
குழந்தையைத் தூக்கிக்கொண்டு
வெளியே வந்தாள் அவள்..

சிரித்த குழந்தையுடன்
சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்
தன்னிருப்பிடம் விட்டெழுந்து
அவள் பின்னால் வந்து நின்று
விளையாட்டுக் காட்டிய கடவுள்..