எங்கள் சொர்க்கம்

கட்டாந்தரையோ, பசும் புல் விரிப்போகாண்பதெல்லாம்
கனிவு தரும்!

பற்றையோ, பொட்டல்காடோ
காண்பதெல்லாம்
கனிவு தரும்!

சுட்டெரிக்கும் வெய்யிலோ,கொட்டும் மழையோ காண்பதெல்லாம் கனிவு தரும்!

அகவும் மயிலோ,
அலறும் ஆந்தையோ
காணபதெல்லாம் கனிவு தரும்.

பசு மரமோ,
பட்ட மரமோ
காணபதெல்லாம் கனிவு தரும்.

வற்றாத நிலாவரையோ, வற்றிவரண்ட பாழுங் கிணறோ காண்பதெல்லாம் கனிவு தரும்!

சுட்டெரிக்கும் வெய்யிலோ,
கொட்டும் மழையோ
காண்பதெல்லாம் கனிவு தரும்!

முற்றும் துறந்த முனிவரோ, முரட்டு ஆசாமியோ
காண்பதெல்லாம் கனிவு தரும்!

மாதா கோவிலோ,மனையுடையம்மன் கோவிலோ
காண்பதெல்லாம்
கனிவு தரும்!

இயற்கையோ, செயற்கையோ
காண்பதெல்லாம்
கனிவு தரும்! – ஏனெனில்

இது எங்கள் ஊர்! – இல்லை
எங்கள்_சொர்க்கம்.