வயாவிளான் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துப்பாடல்

368

வயாவிளான் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துப் பாடல்

வயாவிளான் மத்திய கல்லூரி வாழ்க வாழ்க 
வயவைத் தாயின் செம்மண் மடியில் விதையிட்ட கல்லூரியே வாழ்க

வாழ்க 

வயவைத் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் கல்லூரியே வாழ்க வாழ்க

பணம் படைத்தோர்’ வறியோர்’ எனப் பாராது
அரவணைத்த கல்லூரியே வாழ்க வாழ்க 

எவு(எந்த) இனம்’ எவு (எந்த)மதம்’ எச்சாதி’ பாராது
அனைவரையும் சமமாகக் கொண்ட கல்லூரியே வாழ்க வாழ்க

உன் உருவத்தில் மாற்றங்கள் வந்தாலும்
உன் தரம் துளிகூட குறையாது காத்து நின்ற
கல்லூரியே வாழ்க வாழ்க

வயாவிளான் மத்திய கல்லூரியே வாழ்க வாழ்க

கல்வி எனும் அறிவூட்டிய கல்லூரியே வாழ்க வாழ்க

அன்னை வயிற்றில் பிறந்து உன்
மடியில் வளர்ந்த நாம் உன்னை
ஒருபோதும் மறவோம்
எங்கள் கல்லூரியே வாழ்க வாழ்க

உன் நாமம் எங்கள் உயிர்
உள்ளவரை மூச்சாக இருக்கும்
எங்கள் கல்லூரியே வாழ்க வாழ்க
வயவைக்கு பெருமை சேர்த்த கல்லூரியே வாழ்க வாழ்க

உன் புகழ் மென் மேலும்
இத்தரணியில் பரவிட
உன் பிள்ளைகள் நாம் உறுதிகொள்வோம்
எங்கள் கல்லூரியே வாழ்க வாழ்க

வயவையின் செல்லப் பிள்ளையே வாழ்க வாழ்க

வயாவிளான் மத்திய கல்லூரி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க

அன்புடன் 
வ..பொ.சு.—மாரிட்டி மண்ணின் மைந்தன் 
(வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்)