உடுமலை நாராயணகவி நினைவு நாள்

571

பகுத்தறிவுக் கவிராயர் என்றழைக்கப்படுபவர். நாட்டுபுற மெட்டுகளுக்கு பாட்டெழுதி மண் மணத்தை திரைப்படங்களில் பரவவிட்டவர். திரையுலகப் பாரதியெனப் போற்றப்படும் இவர் 1899 இல் பிறந்து 1981 இதே நாள் அமரத்துவம் எய்தினார்.

கலைஞரின் கதை, வசனம், சிவாஜியின் நடிப்புடன் உடுமலையின் பாடல்களும் பகுத்தறிவு புகட்டி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியதுதான் பராசக்தி படம்.