எம் செம்மண்ணின் ஜனரஞ்சகக் கலைஞர் அமரர் சவரிமுத்து மனோகரன் அவர்கள் இயற்கை எய்தினார்.

109

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை சேர்ந்தவரும் பிரெஞ்சு தேசத்தில் வசித்துவந்தவருமான திரு சவரிமுத்து மனோகரன் காலமாகிய செய்தியறிந்து அவரது நண்பர்கள் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

யாழ் மத்தியகல்லூரியின் (OBA of Jaffna central college ) பழைய மாணவனாகிய மனோகரன் தனது இளமைக்காலத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்கக்கூடியவராகத் திகழ்ந்து வந்தார்.

நடை உடை பழக்கவழக்கம் இசை நகைச்சுவையென எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த சுறுசுறுப்புமிக்க இளைஞனாக எம் செம்மண்ணில் வலம் வந்தவேளை இவரைப்பற்றிய சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு.

அக்காலங்களில் யாழ்நகரில் நடைபெறும் இசை நிகழ்வுகளில் நித்தி கனகரட்ணம் , ஏ.ஈ.மனோகரன் போன்ற பிரபல பொப்பிசைப்பாடகர்களின் பாடல்களுக்கு பெரும் ஆதரவு இருந்து வந்தது பல இடங்களிலிலும் பொப்பிசை நிகழ்சசிகள் நடைபெறுவது வழக்கம்.

ஒரு நாள் இவரது அயலில் நடந்த நிகழ்வொன்றிற்கு பாடகர் ஏஈ மனோகரன் வருவார் என மேலோட்டமாக அறிவித்திருந்தார்கள் சனக்கூட்டம் அவர் பாடலைக்கேட்க ஆவலாய் இருந்த பொழுது அறிவிப்பாளர் இதோ ஏ ஈ மனோகரன் என்று அறிவித்துவிட்டு மன்னிக்கவும் ஏ எஸ் மனோகரன் என்று இவரை மேடைக்கு அழைத்ததும் இரசிகர்களிடையே கூச்சல் எழுந்தது அதை பொருட்படுத்தாது இசைக்குழுவினரை ஆரம்ப இசையை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு “மால் மருகா எழில் வேல்முருகா”… 🎶 🎵 என்ற பாடலை பாட ஆரம்பித்தார் ஏ ஈ மனோகரன் பாடிதுபோலவே இருக்க சபையில் நிசப்பதம் உருவாகியது!

தொடர்ந்தும் பல பாடல்கள் பாடி இரசிகர்களின் அமோக கரகோசங்களையும் வரவேற்பையும் பெற்றார்.

ஜனரஞ்சகமாக அன்றைய நிகழ்வை சிறப்பாக முடித்து வைத்தார்.

இசைக்குழுக்களில் பாடிய அனுபவம் மிக்குறைவானதாக இருந்தாலும் அவரது அயலில் நடைபெறும் விழாக்களுகளிலும் நண்பர்கள் விழாக்களிலும் பாடல்கள் பாடி மகிழ்வித்து வந்தார். பொப்பிசைப் பாடகர் ஏஈ மனோகரனின் ரசிகனாக விளங்கி அவரது பாடல்களை விரும்பி பாடுவதால் இவரை இவரது நண்பர்கள் “பொப் மனோ” என்றே செல்லமாக அழைப்பார்கள்.

இந்த பொப் மனோவின் விருப்பமான பாடல் “Jaffna பெடியள் எல்லாம் சுழட்டல்”…🎶🎵 என்ற பாடலை எங்கு சென்றாலும் இப் பாடலைப்பாடி நண்பர்களை மகிழ்விப்பார்.

எங்கள் தாய்த் திருநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பின்னர் புலம் பெயர்ந்து பிரெஞ்சு தேசத்தில் வாழ்ந்து வந்தார்.

இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் இவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் தமிழன்பர்களுக்கு ஆறுதலைக் கூறிக்கொண்டு அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் இளைப்பாற எல்லாம் வல்லானை வேண்டுகின்றோம்.

எம் செம்மண்ணில் அவதரித்தரித்த கலைஞரின் ஆத்மா சாந்தியடைய இறவனை மன்றாடுவோம்! 💐💐💐

அன்னாரின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் (யாழ் இராசாவினதோட்டம்) நடைபெறுவதற்கான ஒழுங்குகள் நடைபெறுகிறது.

இறுதிச் சடங்குகள் சம்பந்தமான திகதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும்!