ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையுடனேயே பலவிதத்தில் முயற்சி செய்து முன்னேறி வருகின்றான். ஆனால் பலவழிகளில் முயற்சி செய்து இந்தச் சமூகத்தின் உயர்வைக் காணவேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவனே உண்மையான தகுதியுடைய மனிதன்.
அந்தத் தகுதிக்குள்ளேயே அவனின் தரம், குணம், திடம் என்ற மூன்றும் முழுமையாக நிறைந்துள்ளது. முடிவுகளை எடுத்தல், மற்றவர்களுடன் கதைக்கும் தன்மைகள், பிரயோகிக்கும் வார்த்தைகளின் தரம், தொலைநோக்குப் பார்வை என அவனின் குணம் எத்தருணத்திலும் தளம்பாமல் மாறாதிருக்கும்.
அதேபோல அவனின் நிலை உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் தாராள குணமான அன்பு,...
அன்பான வேண்டுகோள்:
https://youtu.be/yxOd5aJEOUs?si=5WxHwcsy1vBjRKLL
ஈழம் சினிமாச் செயற்பாடுகள் சாரந்தும் தேச அரசியல் செயற்பாடுகள் சார்ந்தும் சமூக வலைத்தளம் எமக்கு தவிர்க்க முடியாத்தும் மிகவும் அத்தியாவசியமானதுமான தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அந்த வகையில் பலமான வலைத்தளக் கட்டமைப்பு ஒன்றுக்குள் எமது மக்களை உள்வாங்கும் முயற்சியாக ஆரோக்கியமானதும் அறம் சாரந்ததுமான மகிழ்வூட்டல் படைப்புகளை முதற்கட்டமாக தயாரித்து வெளியிடும் பணியில் நாம் மும்மரமாக இறங்கிச் செயற்பட்டு வருகிறோம்.
அதன் ஒரு முயற்சியாக நாட்டார் பாடல்கள், சிறுவர் பாடல்கள், ஈழத்துப் பாடல்கள், (எதிர் காலத்தில்) விடுதலைப் பாடல்களை இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபல்யப்படுத்தும்...
எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரச உத்தியோகத்தினை தூக்கி எறிந்துவிட்டு போராட்டக்களத்தில் குதித்தவர்களில் திரு.கரிகாலன் அவர்களும் ஒருவர் ஆவார்!
மீனகங்களையும் தேனகங்களையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமாக இலங்கும் எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் "களுவாஞ்சிக்குடி" எனும் தொல்லூரில் அவதரித்தவர்தான் இந்தக் கரிகாலன்.
தனது நீண்ட நெடிய போராட்ட வாழ்வில் அம்பாறை மாவட்டத்தின் அழிக்கம்பை முதல் அளவெட்டி வரை எமது மக்களுக்கு இந்த விடுதலை வீரன் செய்த உன்னத பணிகள் எண்ணில் அடங்காதவை.
அஃதே,
இளைய போராளிகளாகிய எங்களுக்கும் இவர் ஆற்றியவை அளப்பரியவை ஆகும்.
தமிழீழ விடுதலைப் போரின் முதுகெலுப்பாக விளங்கிய பல...
தலைவர் இல்லை என்ற
எண்ணத்தில்,....
குடாரப்பு கூட்டுஆளுமையும்,
திலீபஅர்ப்பணிப்பும்
கைநழுவிடக் கூடாது,
நமக்குள் மனம்விட்டு பரிசீலிக்வேண்டிய
பல்லாயிரம் உயிர் முடிச்சுக்கள் உண்டு,
திமிராய் எழவேண்டிய
களத்தில்என்னால், நம்மால் எழமுடிந்ததா இல்லையே?
வைராக்கியம் கொண்டு
காப்பாற்ற வேண்டிய தருணத்தை நழுவவிட்ட கூச்ச உணர்வு, என்னை,நம்மை எச்சரித்து விழிப்படையச் செய்யவேண்டாமா?.
குப்பி, தகட்டை தொலைத்துவிட்டு
விசிலடி வீறாப்பு நமக்கு எதற்கு?
நிமிர்ந்து தீர்மானிக்க வேண்டிய தருணங்களில்
மில்லரும் ,
அங்கயற்கண்ணியும்
நினைவிற்கு வரவில்லை,
சரி,போகட்டும்..
உலகப்பரப்பெங்கும்
கூடிக்குரல்கொடுத்த நம் மக்களை,
சங்கம்,கழகம்
அமைத்து பங்குபோட்டு,
கூட்டுவலியை பொறுப்பாசை எனும் குறுக்கு வாய்க்கால்வழி
மடைமாற்றி....
அவர் இல்லை என்றதும்,
உரிமை கோரல் உளறல்
கொஞ்சம் அதிகம்தான்.
ஏனய்யா இது?
யாரைத் திருப்திப்படுத்த?
முள்ளிவாய்க்காலில் இருந்து கரையேறிய நம்
கால்களும்,கைகளும்
ஓரணியில்
ஓர்மனதாய்,
ஒரேபுள்ளியில்
உருத்திரண்டு நின்று.
ஆயிரம் சிட்டிகள்,
ஆயிரம் திரிகள்,
ஆயிரமாயிரம் ஒளிதீபம் கொண்டும்,
திருவுருவப் படத்தின்முன்னால் நின்று கொண்டும்,
அணையா...
CNN விளைவு என்றால் என்ன..?
ஆனையிறவுச் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில், எனக்குப்பழக்கமான ஒரு மேலைத்தேயப் படையதிகாரிக்கு புலோப்பளைச் சண்டைக் காட்சியைப் போட்டுக்காட்டினேன்.
இதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவர் ஆனையிறவுச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு " அது ஒரு அசைக்கமுடியாத கோட்டை" என என்னிடம் கூறியிருந்தார். இத்தாவிலில் நிலை கொண்டிருந்த பால்ராஜின் படையோடு, சிறிலங்காவின் 53 வது பிரிவின் படைகளைத் திரும்பத்திரும்ப மோதவிட்டு, தமது ஆள்வலுவைச் சிறிலங்காவின் படைத்தளபதிகள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அந்த மேலைத்தேய இராணுவ அதிகாரி கவலைப்பட்டார். (ஏனெனில் 53.வது படைப்பிரிவை வளர்த்தெடுக்க அவரது நாடு...
"ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர்
உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்!"......
முல்லைத்தீவில் எதிரியின் விலா ஒடித்து தமிழன் விழா எடுத்த போது வெளிவந்த ஒரு விடுதலைப்பாடலின் அர்த்தம் பொருந்திய வரிகள் இவை!
முல்லைச்சமரில் வீரச்சாவு அடைந்த
மாவீரர்கள் குறித்து எம் தேசக் கவிஞரின் மனதில் எழுந்த கவிதைகளே இசைவார்ப்புச் செய்யப்பட்டு விடுதலைப் பாடலாக வெளிவந்தது.
அழகழகாய் சின்னஞ் சிறிய மின்குமிழ்களாய் உலுவிந்தம் பழம் பழுத்துக் குலுங்கும் மாதத்தில் முல்லைச்சமர் நடை பெற்றதால் முத்தான இந்த முதல் வரிகள் எழுந்தது.
வற்றாத ஊற்றாய் நீர் பெருகும் ஊற்றங்கரைக்கு அருகே உள்ள முல்லை நகரில் இந்த...
“பகிரப்படாத பக்கங்கள்” என்ற இந்த நூலில் சுமார் இருபது தேவ தேவதைகளின் வரலாற்றுக் குறிப்புகள் பதியம் செய்யப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.
அதிலும் தமிழீழ மருத்துவத்துறை சார்ந்த பலரது குறிப்புகள் அதிகம் வாசிக்க கிடைத்தன.
உண்மையில் தமிழீழ மருத்துவர்களுக்கு நிகராக எங்குமே வேறு மருத்துவர்களைப் பார்த்ததில்லை.
தமிழீழ மருத்துவர்களுடனான எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும், இந்த நூலின் பதிவுகளிலிருந்தும் அவர்கள் ஒரு தனி வரம் பெற்றவர்கள் என்றே சொல்ல முடியும்.
அவர்களுக்கான வரமும் தரமும் அவனொருவனிடம் இருந்தே கிடைத்திருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
சொல்லப்போனால் இங்கே ஒவ்வொரு பகுதியாக பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு...
"போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்" என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும்
அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை.
அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத்
திரும்புவார்கள்.
அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது.
ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு...
சீரோடும் பெரும் சிறப்புகளோடும் நாம் வாழ்ந்த காரைநகரில் திரு.கதிரவேலு திருமதி வசந்தி தம்பதிகளின் தலைமகனாக 11 - 02 - 1971ஆம் ஆண்டு அவதரித்தார்.
காந்தத்தைப் போலவே கவர்ந்திழுக்கும் கண்களையும் அழகிய வதனமும் வெள்ளை நிறமும் கொண்ட குண்டான அந்தக் குழந்தையை ஊரில் எல்லோரும் "மாம்பழம்" என்றே அழைத்தனர்.
காரைநகரில் ஆரம்பக் கல்வியைக் கற்று ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் யாழ்மாவட்ட மட்டத்தில் அதி கூடிய புள்ளிகள் பெற்று யாழ் இந்துக் கல்லூரியில் க/பொ/த உயர்தரம் வரை கல்வி கற்ற பரீட்சையிலும் நல்ல பெறுபேறுகளை தனதாக்கியவர்.
மருத்துவ...
தொண்ணூற்றேழாம் ஆண்டெனெ நினைக்கின்றேன். முள்ளியவளையில் முதல் முதல் ஐயாவை காண்கிறேன்.
சத்தியசாயி ஆச்சிரமத்தில் ஓர் இசையரங்கு. “கெங்காதரன் டொக்ரர் புல்லாங்குழலாம்”.
புல்லாங்குழலை ஒரு அரங்க நிகழ்வாக அன்றுதான் முதலில் பார்க்கப்போகிறேன்.
பக்கவாத்தியக்கலைஞர்கள்
எல்லாம் வந்துவிட்டார்கள்.
அந்த எழிமையான மனிதன் சைக்கிளில் ஒரு பையில் மூன்று புல்லாங்குழல்களை கொண்டு வந்தார்.
ஒரு மருத்துவர் காரிலோ அல்லது வேறேதும் வாகனங்களிலோ வருவார் எனவே எதிர்பார்த்திருந்தேன்.
அந்தக்கம்பீரமான நடையுடன் வந்து அரங்கில் அமர்ந்தார்.
அரங்கு ஆரம்பமாயிற்று.
திகைப்புடனும், வியப்புடனும் வேணுகானத்தில்சொக்கிப்போனேன்.
கணீரென்று காதுகளில் பாய்ந்தது வேய்ங்குழலின் ஸ்வரங்கள். இன்னும் என்னிதயத்தைத் தொட்டது!
“ கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன் “ எனும்...