அப்பாவும் மகளும்

253

நீண்ட நெடுஞ்சாலை யொன்றில்
நடந்து கொண்டிருந்தோம்
நீயும் நானும்..!

என் காதோர நரைகளோடு
உரையாடிக் கொண்டிருந்தாய்
நீ..

உன் முழுநரை தலைமுதல்
உள்ளங்காள் வரை
இரசித்துக்கொண்டிருந்தேன் நான்..

ஒற்றை நொடியொன்றில்
சுருக்கம் விழுந்த தோல்களுடன்
என்னோடு கைகோர்த்தாய்..

சட்டென நம் முன்னால் பறந்ததை
அழகான பறவை என்றாய் நீ.. – அது
உலகம் என்றே
முடிவு செய்து கொண்டேன் நான்..