29 ஆண்டுகளின் பின் தன்னிடத்தில் பலாளிப்பள்ளி.

176

ஈழத்தீவின் பலாலியூர் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூர் மக்களிடம் வந்தவண்ணம் உள்ளது.   நிதானமான விடாமுயற்சியின் பலனை அவ்வூர் மக்கள் அனுபவிக்க ஆயத்தமாகிவிட்டனர்.

அவ்வகையில்  யா/பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பள்ளி தன் சொந்த இடத்தில் இயங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

04/01/19 இன்று அப்பள்ளியின் மீள் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

29 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அதே இடத்தில் தம்பள்ளி இயங்க உள்ளமையையிட்டு பலாலியூர் மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.