வயாவிளான் மக்கள் ஒன்றிய நாட்காட்டி.

314

ஒவ்வொரு நாளையும் “எனது நாளாக்க வேண்டும்” என்ற எண்ணத்துடனேயே ஒவ்வொருவரும் ஓடி உழைத்துக்கொண்டிருக்கின்றோம். 

ஒவ்வொரு நாளையும் நமது நாளாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை நமக்குள் விதைக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் நாட்காட்டி.

ஊருக்காகவும் உழைத்த உள்ளங்களின் நினைவு நிழலுடன் வெளியிடப்பட்ட வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் நாட்காட்டியைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நானும் ஊருக்காக/சமுகத்துக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மேலெழும்.

ஒருவருடைய ஆழ் நெஞ்சிலுள்ள நல்லெண்ணங்களை மேலெழச் செய்யும் செயலைச் செய்வோர் மேலானோரே..

அவ்வகையிலும் வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் செயல் பாராட்டுக்குரியதே.. மகிழ்வுடன் பாராட்டுவோம்..