நத்தார் நன்னாள்.

சுற்றத்து மரங்களில் சுத்தமாய்
இலைகள் இல்லை.

முற்றத்து மரம் மட்டும் சடைத்து
மின்மினி விளக்குகளால் சிரிக்கிறது.

ஆம் என்றும் பசுமையான ஊசியிலை கொண்ட அந்தக் கூம்பு மரம்,

பாலன் ஜேசு பிறக்கப் போவதாகக் கட்டியம் கூறி நிற்கிறது.

மானுட விடுதலை தேடிய ஜேசுபிரானின் கடைக்கண் பார்வை தமிழரெம் மீதும் பட
வேண்டுவோம்.

வேண்டுவோம் யாமெல்லாம்!
வேண்டுவோம் நாளெல்லாம்!