கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல் – 4

150

பாடம் 4:

தலைவனுக்கு அந்த ஒரு காரியத்தின் ஆதி முதல் இறுதி வரையான ஒவ்வொரு கட்டத்திற்கான திட்டமும் வரைமுறைகளும் தெளிவாகத் தெரிய வேண்டும். என்ன என்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன, விதிகளின் இண்டு இடுக்குகள், எது மிக முக்கியமான குறிக்கோள் போன்றவற்றில் தெளிவு இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதற்கான தெளிவு என்ன வழிகள் கைவசம் இருக்கின்றன என்பதற்கான தெளிவு வேண்டும் 

முதல் 20/20 போட்டியிலேயே அதை எந்த அளவு புரிந்து கொந்திருக்கிறார் தோனி என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். டை பிரேக்கருக்கான 5 பந்து வீச்சாளர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இராபின் உத்தப்பா. இவரை எப்படிக் கண்டு பிடித்தார்? பயிற்சியின் போது இதற்கென தனியாய் நேரம் ஒதுக்கிக் கண்டுபிடித்திருக்கிறார். 

அந்த ஐபிஎல் ரன் அவுட் விஷயத்திலும் விதிமுறை அவரின் மனதின் ஓரத்தில் இருந்தே இருந்திருக்கிறது. அப்போதையத் தேவை அடித்து ஆடும் பேட்ஸ்மேன் ஆட்டமிழப்பது. அதற்கான வாய்ப்பு இருப்பதை ஒரு கணநேரத்திற்குள் அறிந்து பந்து வீச்சாளரைக் கட்டுப்படுத்தினார் என்றால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவானப் பார்வை உள்ளது என்றுதானே அர்த்தம்.

பேட்டிங் வரிசையை முடிவு செய்வதிலாகட்டும், பந்து வீச்சாளர்களுக்கு மட்டையாளர்களின் தடுமாற்றங்களைச் சொல்லித் தருவதிலாகட்டும்.. எப்பொழுது விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும், எப்பொழுது ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும், எப்பொழுது அதிரடி தேவை, எப்பொழுது நிதான ஆட்டம் தேவை என்பதற்கான தெளிவான திட்டங்களை வைத்திருப்பது மிக ஆச்சர்யமான ஒன்று. தனிப்பட்ட வீரர்களை விட குழுவாக அவருக்கு வெற்றிகளைத் தேடித்தந்த தருணங்கள் அதிகம்.

அதற்குக் காரணம் இருக்கிறது. அது  நிர்வாகவியல் கோட்பாடு..

அது நாளை..